crossorigin="anonymous">
பொது

ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் – சபாநாயகர் சந்திப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலித் நசர் அல்-அமீரி நேற்று (08) இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தார்.

பல்வேறு அம்சங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

அந்நாட்டின் தேசிய பேரவைக்கு (National Council) பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் முறை தொடர்பில் விளக்கமளித்த தூதுவர், இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடினார்.

சிறுவர்கள் மற்றும் பெண்களைப் வலுப்படுத்துவது தொடர்பிலும், குறிப்பாக வர்த்தகத்துறையில் பெண்களை வலுப்படுத்துவது குறித்தும் இங்கு கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

நாட்டின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யப் புதுப்பிக்கத்தக்க சக்தியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதும் குறித்தும் இங்கு மேலும் கவனம் செலுத்தப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 3

Back to top button
error: