crossorigin="anonymous">
பொது

நீர் மற்றும் மின் இணைப்பு வழங்குவதில் மட்டுப்பாடு

வழங்குவதற்கு தேவையான உபகரணங்கள் பற்றாக்குறை

இலங்கை முழுவதும் தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புகள் புதிதாக வழங்குவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புக்களை வழங்குவதற்கு தேவையான உபகரணங்களின் பற்றாக்குறை காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தண்ணீர் மற்றும் மின்சார இணைப்புக்கள் வழங்கு உபகரணங்கள் மற்றும் பொருட்களை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கான திறந்த கடன் பத்திரங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் போதுமான அளவு டொலர்கள் இல்லாததே இதற்குக் காரணம்.

திடீரென்று ஏற்படுகின்ற செயலிழப்புக்களை சீர் செய்வதற்கு தற்போதுள்ள மூலப்பொருட்கள் கையிருப்பில் இருக்க வேண்டும் என்பதால் புதிய இணைப்புகள் வழங்குவதை தற்காலிகமாக மட்டுப்படுத்தியுள்ளதாக மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 65 − 55 =

Back to top button
error: