crossorigin="anonymous">
பொது

ஜனாதிபதி பதவி விலகல் அறிவிப்பு பாராளுமன்றத்தில்

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பில் அறிவிப்பதற்கு இலங்கை பாராளுமன்றம் நாளை (16) சனிக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு கூடவுள்ளதாக இலங்கை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க இன்று (15) தெரிவித்தார்

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அனைத்து இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமாக் கடிதம் தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (15)  அறிவித்தார்.

அதற்கமைய 2022 ஜூலை 14 ஆம் திகதி முதல் ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்துள்ளதாக இன்று (15)  இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 2

Back to top button
error: