crossorigin="anonymous">
பொது

பஸ் கட்டணம் மீண்டும் அதிகரிப்பு

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் கட்டணம் இன்று முதல் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணம் 22 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிருண்டா தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டண மறுசீரமைப்பு தேசிய கொள்கைத் திட்டத்திற்கமைய வருடாந்தம் ஜுலை மாதம் 1ம் திகதி கட்டண மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகின்றது. புதிய கட்டண மறுசீரமைப்பின்படி 22 வீதத்தினால் பஸ்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறுந்தூரத்திற்கான ஆகக்குறைந்த கட்டணம் 32 ரூவாவில் இருந்து 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 70 − = 66

Back to top button
error: