crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

குருளைச்சாரண மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் குருளைச்சாரண மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்று (07) செவ்வாய்க்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

கல்வி அமைச்சின் இணைப்பாடவிதான செயற்பாட்டின் ஒரு அங்கமான சாரணிய இயக்கத்தில் புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் செயற்பாட்டிற்கமைய மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் அதிபர் ஆர்.பாஸ்கர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் குழுச் சாரண தலைவர் எம்.சந்திரசுசர்மன் அவர்களது தலைமையில் குருளைச் சாரண தலைவர்களான என்.பிரதீபன்,திருமதி.ஜே.விநாயகமூர்த்தி, திருமதி.சீ.பஞ்சேந்திரன் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது

மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வில் 36 மாணவர்களுக்கு
பெற்றோரின் பங்களிப்புடன் சின்னஞ் சூட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 3

Back to top button
error: