crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கள பணியாளர்களுக்கு கொவிட்19 தடுப்பூசி 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது கொரோனாவின் 3 ஆவது அலை தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் நின்று முதற்களப் பணியாளர்களாக பணியாற்றும் அரச அதிகாரிகளுக்கு சினோபாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மண்முனை மேற்கு சுகாதார வைத்தியர் பிரிவில் நேற்று வியாழக்கிழமை (10) ஆரம்பமானது.

மண்முனை மேற்கு பிரதேச செயலகப் சுகாதார பிரிவுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்பாடு மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது பிதேசத்திலுள்ள பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் மற்றும் மக்களுடன் நேரடி தொடர்புடைய பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் போன்றோருக்கு முதற்கட்டமாக மண்முனை மேற்கு பிரதேச சுகாதார வைத்தியர் தலைமையிலான சுகாதாரப் பிரிவு உத்தியோகத்தர்களால் சினோபாம் தடுப்பூசி ஏற்றப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 5 =

Back to top button
error: