crossorigin="anonymous">
உள்நாடுபொது

எம்.பி களின் சொத்துக்கள் மற்றும் உயிர்களைப் பாதுகாக்க விசேட நடவடிக்கை

இலங்கையில் தற்போதைய நெருக்கடி நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றம் வருவதற்கும் அச்சுறுத்தலாக உள்ளதால், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் மற்றும் உயிர்களைப் பாதுகாக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கையில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் மற்றும் உயிர்களைப் பாதுகாக்க விசேட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்த சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினர்களின் மற்றும் அவர்களது வசிப்பிடங்களின் பாதுகாப்பை அதிகரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 50 + = 53

Back to top button
error: