crossorigin="anonymous">
உள்நாடுபொது

கார் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து!, 5 மாத குழந்தை உயிரிழப்பு!!, 7 பேர் காயம்!!!

கண்டியிலிருந்து பதுளை நோக்கி சென்றுகொண்டிருந்த காரொன்று வலப்பனை பொலிஸ் பிரிவில் இன்று (08) மாலை 4.30 மணியளவில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காயமடைந்து ஐந்து மாத குழந்தையொன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் வலப்பனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டியிலிருந்து அதிகாரகமை ஊடாக பதுளை நோக்கி பயணித்த காரே வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்து இடம்பெற்றுள்ளதாக வலப்பனை போக்குவரத்து பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 58 − 49 =

Back to top button
error: