crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

இரத்தினபுரி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி

(நதீர் சரீப்தீன்)

சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (08) சப்ரகமுவ மாகாண சபையின் ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் இடம்பெற்றது.

சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான தடுப்பூசி வழங்கும் நிகழ்வில் இரத்தினபுரி மாவட்டத்தின் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகவியலாளர்கள் பங்கு கொண்டு தடுப்பூசியை பெற்றுக் கொண்டனர்.

ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி வழங்கி வைக்க நடவடிக்கை எடுத்த மாகாண சபை ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவ மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சு ஆகியோருக்கு மாவட்ட ஊடகவியலாளர் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 2 + 6 =

Back to top button
error: