crossorigin="anonymous">
உள்நாடுபொது

அமைச்சர் சாந்த பண்டார ஶ்ரீ.ல.சு.க வின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார இராஜாங்க அமைச்சராக நேற்று (11) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதை தொடர்ந்து அவர் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது

ஶ்ரீ.ல.சு.க. அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க முடிவு செய்துள்ள நிலையில், இவ்வாறு அமைச்சு பதவியை பொறுப்பேற்றதற்கு அமைய அக்கட்சி குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளது

பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார இராஜாங்க அமைச்சராக பதவி ஏற்பு தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 31 + = 34

Back to top button
error: