crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

தேசிய கபடி அணியில் முல்லைத்தீவு மாவட்ட வீரர் வசந்தகுமார்

முல்லைத்தீவு மாவட்ட கபடி அணி வீரரான மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வன்னிவிளாங்குளம் அம்பாள்புர கிராமத்தைக் சேர்ந்த வசந்தகுமார் தேசிய கபடி அணியில் அங்கத்துவராகியுள்ளார்.

வங்காளாதேஷ் டாக்காவில் தற்சமயம் நடைபெறும் 2022ம் ஆண்டு பங்கபந்து சர்வதேச கபடி போட்டியில் இலங்கை தேசிய அணியில் வசந்தகுமார் விளையாடி வருகிறார்.

போட்டியில் பங்களாதேஷ் இந்துனோசியா, கென்யா, ஈராக், மலேசியா, இலங்கை, நேபாளம், இங்கிலாந்து நாட்டின் தேசிய அணி ஆகிய நாடுகளுக்கிடையே போட்டி டாக்காவில் தற்சமயம் நடைபெற்றுவருகின்றது.

தேசிய அணியில் அங்கம் வகிக்த்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமை தேடிதந்த மாவட்ட சிறந்த கபடி அணிவீரர் வசந்தகுமாருக்கு முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுத்துறை, மாவட்ட கபடி சங்கம் மாவட்ட விளையாட்டு வீரர்கள் சார்பாக பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 67 − = 60

Back to top button
error: