crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

 CCTV Camera மற்றும் கையடக்கத் தொலைபேசி திருத்தும் பயிற்சி

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் இழப்பீட்டு க்கான அலுவலகத்தினால் “அறிவு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம்” திட்டத்தின் கீழ் CCTV Camera தொழில்நுட்பம் மற்றும் கையடக்கத் தொலைபேசி திருத்துதல் தொடர்பான பயிற்சி நெறி நேற்று (05) இடம்பெற்றுள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பயிற்சிப் பட்டறையில் முப்பது பேர் கலந்து கொண்டனர்.

இதன்போது குறித்த துறைசார் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்களின் பின்னூட்டம் பெறப்பட்டுள்ளதுடன் எதிர்கால பயிற்சிகள் தொடர்பான விடயங்கள் பெறப்பட்டுள்ளன.

இந் நிகழ்வில் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் உதவிப் பணிப்பாளர் சாந்த பத்மசிறீ, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ப.ஜெயராணி, மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கிருபாகரன், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 7 = 1

Back to top button
error: